ரயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவி பலி

ரயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவி பலி

சீர்காழி தாலுகா கொள்ளிடம் அருகே பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ஆயிஷா சித்தி (19). இவர் சீர்காழியில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கோடை விடுமுறைக்காக தனது பாட்டி ஊரான திண்டுக்கல்லுக்கு ரயிலில் சென்று விட்டு மீண்டும், ரயிலில் சிதம்பரம் நோக்கி குடும்பத்தினர் உடன் பயணம் செய்துள்ளார்.

இந்நிலையில் ரயில் படிக்கட்டு அருகே அமர்ந்து வந்த ஆயிஷா சித்தி மணப்பாறை அடுத்த ஆண்டவர் கோவில் கள்ளிப்பட்டி என்ற இடத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்து உள்ளார். ரயிலில் பயணம் செய்த ஆயிஷா சித்திக்கை காணாமல் அவரது பெற்றோர்கள் திருச்சி ரயில் நிலையத்தில் இறங்கி தேடிப் பார்த்துள்ளனர். அங்கு கிடைக்காததால் காவல்துறையிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மணப்பாறை அருகே ரயில் தண்டவாளத்தில் ஆயிஷா சித்தி கீழே விழுந்து உயிரிழந்ததை குறித்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே போலீசார் ஆயிஷா சித்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்துள்ளனர்.

ரயிலில் பயணம் செய்த கல்லூரி மாணவி தவறி விழுந்தது இந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn