உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் - ரசிகர்கள் கொண்டாட்டம்

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் - ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழகத்தில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் மாநிலம் முழுவதும் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் மரணம், ராஜினாமா உள்ளிட்ட காரணங்களால் காலியாக உள்ள 3 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 ஊராட்சி தலைவர், 19 வார்டு உறுப்பினர்கள் என 24 பதவிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 24 பதவிகளுக்குமான தேர்தல் அக்டோபர் மாதம் 9ம் தேதி நடைபெறுகிறது. இதில் 3 ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் மட்டும் அரசியல் கட்சிகள் சார்ந்து அவற்றின் சின்னங்களின் அடிப்படையில் நடைபெறும், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் தேர்தல் கட்சி சார்பின்றி பொது சின்னங்களின் அடிப்படையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்ட போவதாக அறிவித்ததுள்ளனர். இதற்கான வேட்பாளர் விரைவில் தேர்வு செய்யப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட போவதால் திருச்சி மத்திய மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர் செந்தில் தலைமையில் ரசிகர்கள் மற்றும் இயக்க நிர்வாகிகள் தில்லை நகர் பகுதியில் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn