நாய்களுக்கு கருத்தடை - திருச்சி மாநகராட்சி அழைப்பு!!

நாய்களுக்கு கருத்தடை - திருச்சி மாநகராட்சி அழைப்பு!!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண் 57ல் உள்ள கோணக்கரை  பகுதியில் நாள் ஒன்றுக்கு 30 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை  செய்யும் வசதி கொண்ட "நாய் கருத்தடை அறுவை சிகிச்சை மையம்" அமைந்துள்ளது.  

Advertisement

தெருநாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொள்வதற்கு இந்திய விலங்குகள் நல வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட, விருப்பம் உள்ள தொண்டு நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை ஆணையர், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி என்ற முகவரிக்கு 18.12.2020   மாலை 5.00 மணிக்குள் பதிவு அஞ்சல் அல்லது  விரைவு அஞ்சல்மூலம்  அனுப்பி  வைக்க பேராட்சி ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement

மேலும் 18.12.2020க்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் முற்றிலும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனவும்   தெரிவிக்க பட்டுள்ளது.