அதிமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்

அதிமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், பாதுகாப்பு அற்ற சூழ்நிலையையும், பட்டியலின மக்களை தொடர்ந்து ஏளனமாகவும், பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூரத் தாக்குதல் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது முறையான நடவடிக்கை எடுக்காத விடியா திமுக அரசைக் கண்டித்து,

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அஇஅதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். நாளை (01.02.2024) வியாழக்கிழமை. காலை 10:00 மணியளவில் வாளவந்தான்கோட்டை, கடைவீதியில் நடைபெற உள்ளது. இந்த ஆர்பாட்டத்திற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் தலைமையேற்று கண்டன உரையாற்றுகிறார்.

அதுசமயம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, கிளை, வட்ட, வார்டு கழகங்களுக்கு உட்பட்ட நிர்வாகிகள், சார்பு அணிகளை சார்ந்த நிர்வாகிகள், மற்றும் செயல்வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவண் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision