அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடியாக விண்ணப்ப பதிவு - மாவட்ட ஆட்சியர் தகவல்

அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடியாக விண்ணப்ப பதிவு - மாவட்ட ஆட்சியர் தகவல்

திருச்சிராப்பள்ளி துவாக்குடிமலை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் முழுநேரம் மற்றும் பகுதிநேரம் முதலாமாண்டு சேர்க்கைக்கான 2022-2023-ஆம் கல்வி ஆண்டில் நீட்டிக்கப்பட்ட சேர்க்கைக்கு கீழ்கண்ட பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவிகள் கல்லூரியில் நேரடியாக விண்ணப்ப பதிவு செய்து பயன்பெறலாம். 

முதல் சுழற்சி (காலை 8 மணி முதல் மாலை 3.30 மணி வரை) பாடப்பிரிவுகள்: சிவில்சிவில் / மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / எலட்ரானிகஸ் / கம்ப்யூட்டர் மற்றும் சுகர் டெக்னாலஜி பயிலவும், இரண்டாம் சுழற்சி (காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை) பாடப்பிரிவுகள் : சிவில் (தமிழ் வழி) / மெக்கானிக்கல் (தமிழ் வழி) / எலக்ட்ரிக்கல் / எலட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் பிரிவுகளில் பயிலவும்,

மேலும் பகுதி நேர பாடப்பிரிவுகளில் சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் பயில இருபாலருக்கும் தனித்தனியாக விடுதி வசதிகளும் உள்ளது. விண்ணப்பக் கட்டணம் : 150/- செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இலவசம்.

முழுநேர பட்டயப் படிப்புக்கு கல்லூரிக் கட்டணம் வருடத்திற்கு ரூ.2,112/- மட்டுமே. தமழக அரசின் இலவச பேருந்து பயண அட்டை / கல்வி உதவித் தொகை போன்ற சலுகைகளை மாணவர்கள் பெறலாம். மேலே குறிப்பிட்டுள்ள பாடப் பிரிவுகளில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களின் இனசுழற்சி அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும்.

மேலும் விபரங்ளுக்கு 0431-2552226 மற்றும் 98438 63477 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். கல்வி பயில விருப்பமுடைய மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO