திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் தேதி - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் தேதி - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

15.01.2022 திருவள்ளுவர் தினம், 18.01.2022 வள்ளலார் தினம் மற்றும் 26.01.2022 குடியரசு தினம் ஆகிய தினங்களில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் மூடப்பட்டிருக்கும்.

மேலும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள் மற்றும் FL1, FL2, FL3 FL3A, FL3AA மற்றும் FL11 பார்கள் அனைத்தும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும்.

மேலும், அன்றைய தினங்களில் 
மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு 
செல்வதையும் தவிர்க்க வேண்டும், மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn