திருச்சி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருச்சி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

வருகிற 2ம் தேதி காந்தி ஜெயந்தி முன்னிட்டும், 9ம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் அனைத்து வகையான மதுபான கடைகளை மூட திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த மதுபான கடைகளுடன் இயங்கும் பார்களும், மதுபான சில்லறை விற்பனை கூடங்களும், பெரிய ஓட்டல்களில் செயல்படும் பார்களும் மூடி இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அன்றைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO