நாய்க்கு பிறந்தநாள்.. கேக் வெட்டி கொண்டாடிய திருச்சி குடும்பம்!

நாய்க்கு பிறந்தநாள்.. கேக் வெட்டி கொண்டாடிய திருச்சி குடும்பம்!

திருச்சி தென்னூர், காம்ராஜ் நகரில் வசிக்கும் முருகன் - வள்ளி தம்பதியினர் கடந்த 18-12-2021 முதல் ஆண் நாய்க்குட்டிக்கு (ஹிட்டு) மற்றும் பெண் நாய்க்குட்டிக்கு (சார்வி) எனப் பெயர் வைத்து இரண்டு நாய்க்குட்டிகளை வளர்த்து வருகின்றனர்.

ஹிட்டு, சார்வி எனப் பெயரிடப்பட்ட இரண்டு நாய்க்குட்டிகளுமே குடும்பத்தினரிடமும், வீட்டிற்கு வரும் உறவினர்கள், விருந்தினர்களிடமும் அன்பாக பழகக்கூடியது. (18-12-2022) அன்று நாய்க்குட்டிகளுக்கு 1 வயது நிறைவடைவதையொட்டி கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடினர்.

தன் பிள்ளைகளைப் போல செல்லப்பிராணிகளுக்கு கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் கொண்டாடியது அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்களிடையே வியப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH 

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO