சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தீ தடுப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை 

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தீ தடுப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை 

திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் தீதடுப்பு பயிற்சி மற்றும் தீத்தடுப்பு ஒத்திகை சமயபுரம் தீயணைப்பு நிலையம் நிலைய அலுவலர் கே.முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இப்பயிற்சியை திருக்கோயில் இணை ஆணையர் / செயல் அலுவலர் சி.கல்யாணி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். திருக்கோயில் பகுதியில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தடுப்பது என்பது குறித்தும், கூட்ட நெரிசலில் பக்தர்கள் எவ்வாறு பாதுகாப்பது அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்வது

என்பது குறித்தும், சமையல் எரிவாயு சிலிண்டர்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் செயல்முறை விழிப்புணர்வு பயிற்சியை சமயபுரம் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் மீட்பு குழுவினர் செய்து காட்டினர்.

பயிற்சியில் திருக்கோயில் பணியாளர்கள், அர்ச்சகர்கள், திருக்கோயில் ஒப்பந்த காவல் பணியாளர்கள், திருக்கோயில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பாளர்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn