திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு

திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல்-2024 முன்னிட்டு வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் பொருட்டு திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ. வருண் குமார், உத்தரவின் பேரில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு திருச்சி மாவட்டத்திற்கு வந்துள்ள மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் இணைந்து ஊர்காவல் படையினரின் வாத்தியகுழு இசையுடன் கொடி அணிவகுப்பை இன்று (31.03.2024)-ம் தேதி 16:00 மணிக்கு முசிறி கைகாட்டியில் இருந்து திருச்சிராப்பள்ளி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபாலச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில், முசிறி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், யாஸ்மின் மற்றும் 6 காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், மேற்படி கொடி அணிவகுப்பில் மத்திய பாதுகாப்பு படையினர் 56 திருச்சி மாவட்ட காவல்துறையினர்- 156 என சுமார் 220 பேர் கலந்து கொண்டனர். மேற்படி கொடி அணிவகுப்பானது முசிறி கைகாட்டியில் இருந்து புறப்பட்டு முசிறியில் உள்ள துறையூர் ரோடு பூங்கா வரை சென்று முடிக்கப்பட்டது.

துறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துறையூரில் உள்ள முசிறி பிரிவு ரோடு அருகே கொடி அணிவகுப்பு ஆரம்பிக்கப்பட்டு துறையூர் பயணியர் மாளிகையில் முடிக்கப்பட்டது. மேலும் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல்-2024 தொடர்பாக புகார் ஏதேனும் தெரிவிக்க வேண்டி இருப்பின் திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண். 9487464651 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision