திருச்சி அதிமுக நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர் ஆலோசனை.

திருச்சி அதிமுக நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர் ஆலோசனை.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக கருப்பையா போட்டியிடுகிறார். திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும், அதிமுக வேட்பாளர் கருப்பையா, முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், திருச்சி தென்னூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனையில் அதிமுக நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திருச்சி மாவட்ட செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், வளர்மதி, மனோகரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதில், பூத் கமிட்டி அமைக்கப்பட்ட விதம், தேர்தல் பொறுப்பாளர்களின் பணி, தலைமை கழக பேச்சாளர்கள், திரைப்பட துறையினர் பங்கேற்கும் பிரச்சார கூட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision