குடிநீர் கேட்டு சாலை மறியல் - கல்லூரி மாணவி மயக்கம்

குடிநீர் கேட்டு சாலை மறியல் - கல்லூரி மாணவி மயக்கம்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த புலிவலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெரமங்கலம் ஊராட்சியில் கடந்த ஒரு மாத காலமாக காவிரி குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. இது பற்றி பலமுறை கிராம பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நிர்வாகம் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் பெரமங்கலத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை காலி குடங்களுடன் திடீரென துறையூர் திருச்சி மெயின் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மறியலில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவி ஒருவர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் மயக்கம் அடைந்த பெண்ணை தூக்கி சென்று முதல் உதவி அளித்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த புலிவலம் காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ் ஊராட்சி மன்ற தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு முறையாக காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் துறையூர் திருச்சி மெயின் ரோட்டில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision