அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு ஓபிஎஸ் தேர்தலில் போட்டி என திருச்சியில் முன்னாள் அமைச்சர் கு.ப கிருஷ்ணன் பேட்டி

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு ஓபிஎஸ் தேர்தலில் போட்டி  என திருச்சியில் முன்னாள் அமைச்சர் கு.ப கிருஷ்ணன் பேட்டி

திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கு.ப கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்த அளவில் ஓ. பன்னீர்செல்வம் தான் ஒருங்கிணைப்பாளர் என்று தான் தற்பொழுது வரை தேர்தல் ஆணையத்தில் உள்ளது.

பொதுச் செயலாளர் தேர்தலுக்கான களப்பணிகளை நாங்கள் தற்பொழுது ஈடுபட்டு வருகிறோம்..மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவுரை கூறியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால்  எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒன்றும் தெரியவில்லை என்று நான் கருதுகிறேன். வைத்தியலிங்கம் சசிகலா சந்திப்பு குறித்த கேள்விக்கு இயல்பான ஒரு சந்திப்பு என்று பதில் அளித்தார்.

கட்சி அலுவலகத்தில் ஓபிஎஸ் படம் நீக்கியது குறித்த கேள்விக்கு?ஒரு வீட்டை வெள்ளை அடித்து தான் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பார்கள் அந்தப் பணிகளை தான் தற்பொழுது அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள் விரைவில் எங்கள் அலுவலகம் எங்கள் கைக்கு வந்து விடும் அதன் பிறகு அனைத்தும் சரி செய்யப்படும்..

பொதுச் செயலாளர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடட்டும் தொண்டர்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களை அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். அதிமுக சட்ட விதிப்படி இடைக்காலம் என்பதே கிடையாது. ஆகையால் இடைக்கால பொதுச்செயலாளர் என்பதும் செல்லாது அப்படி ஒன்று கிடையவே கிடையாது.

எதிர்காலத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொதுச் செயலாளர் ஓ. பன்னீர்செல்வம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அந்த பதவியோடு வழி நடத்துவோம். தேர்தலை சந்திக்க ஓபிஎஸ்ம் நாங்களும் தயாராகி வருகிறோம் என்றார்.எம்ஜிஆரையோ ஜெயலலிதாவையோ எதிர்த்து நிற்க யாரும் அப்போது இல்லை அதனால் அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள். ஆனால் அப்படிப்பட்ட வல்லமை படைத்த தலைவர்கள் இப்பொழுது யாரும் இல்லை.

ஆகையால் தேர்தல் மூலமாக தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவரால் மட்டுமே அதிமுகவை வழிநடத்த முடியும் என்றார்.அதிமுகவின் சட்ட விதிகளை படி தேர்தல் நடத்த வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.  எம்ஜிஆர் காட்டிய வழியில் பயணிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.இபிஎஸ் அவருடைய வழியில் செல்ல வேண்டும் என்று நினைத்தால் செல்லட்டும். பின்னர் மீண்டும் திரும்பி வருவார் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...    https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6sa

#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLanO