குடும்பத்தோடு நான்கு பேர் தற்கொலை - வெளியான அதிர்ச்சி தகவல்

குடும்பத்தோடு  நான்கு பேர் தற்கொலை - வெளியான அதிர்ச்சி தகவல்

திருச்சி அருகே உள்ள மேலகல்கண்டார் கோட்டையில் கடன் பிரச்சினை காரணமாக இரண்டு குழந்தைகளைவிஷம் கொடுத்து கொன்றுவிட்டு கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவெறும்பூர் அருகே உள்ள மேல கல்கண்டார்கோட்டை மூப்பனார் நகரை சேர்ந்தவர் ஜோசப் இவரது மகன் அலெக்ஸ் 42இவரது மனைவி விக்டோரியா மகள்கள் ஆராதனா ஆலியா என நான்கு பேரும் பசித்து வந்த நிலையில் இன்று காலை வீடு திறக்கப்படாமல்இருந்ததை பார்த்த அக்கம்

பக்கத்தில் இருந்த அவர்கள் ஏன் இவ்வளவு நேரம் ஆகியும் வீடு திறக்கவில்லை என  பார்த்தபொழுது வீட்டின் கதவு உள்பக்கம் தாளிடப்பட்டிருந்ததாகவும் பின்னர்அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து வீட்டில் உள்ளே சென்று பார்த்துள்ளனர் அலெக்ஸ் மற்றும் விக்டோரியா தூக்கில் தொங்கியநிலையில் இருந்துள்ளனர் படுக்கையறையில்குழந்தைகள் ஆராதனா ஆலியா ஆகியோ இருவரும் விஷம் சாப்பிட்டு இறந்த நிலையில் கடந்துள்ளனர்.

 இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக பொன்மலை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர் அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்மலை உதவி ஆணையர் சதீஷ்குமார் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் அடங்கிய போலீசார் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த போது 

அலெக்ஸ் ஜவுளி வியாபாரம் செய்து வந்ததாகவும் அதில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இவரது மனைவி விக்டோரியா (35) இவர் ரயில்வே ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர்களது மகள்கள் ஆராதனா (9 )இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துவந்தார். ஆலியா (3) என இரண்டு குழந்தைகள் உள்ளன 

இந்த நிலையில் அலெக்சருக்கு ஜவுளி வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடன் ஏற்பட்டுள்ளது மேலும் தஞ்சையில் உள்ள அவரது அம்மாவிற்கு கேன்சர் நோயிற்காக மருத்துவமனை செலவு செய்ததில் ரூ 3 லட்சம் வரை கடன் ஏற்பட்டதாகவும் அதே போல் அவரது தம்பிக்கு தொழில் செய்வதற்காக கடன் வாங்கி கொடுத்ததை திரும்ப கொடுக்க முடியாமல் போனதாகவும் இப்படி அடுத்தடுத்து கடன் சுமை அதிகரித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

 இந்த நிலையில் மேல கல்கண்டார் கோட்டை மகாலட்சுமி நகர் பகுதியில் அலெக்ஸ் புதிதாக ஒரு வீடுகடன் வாங்கி இருந்ததாகவும் அதற்குரிய கடன் தவணைத் தொகையை விக்டோரியாவின் தாயாருக்கு வந்த பென்சன் தொகையில் இருந்து கொடுத்து வந்ததாகவும் இந்த நிலையில் விக்டோரியாவின் தாயாரும் சமீபத்தில் இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது இதனால் அந்த பென்ஷன் தொகை கிடைக்காமல் போனது இதனால் வீடு வாங்கியது செலுத்த வேண்டிய கடன் தவணைத் தொகையும் சேர்ந்ததால் அலெக்ஸ் மற்றும் விக்டோரியாவிற்கு மன உளை‌ச்சல் ஏற்பட்டுள்ளதோடு கடன் சுமை அதிகரித்ததால் மனம் வெறுத்து போனதுடன் அலெக்ஸும் விக்டோரியாகவும் தனது இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கலந்து

 கொடுத்துகொலை செய்துவிட்டு தாங்களும் தற்கொலை செய்து கொள்வதென முடிவு செய்துள்ளனர் அதன் அடிப்படையில் குழந்தைகளுக்கு விஷத்தை கொடுத்து கொலை செய்ததோடு அலெக்ஸ் விக்டோரியாவும் தூக்கிட்டு வீட்டிற்குள்ளேயே தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது மேலும் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision