மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து அட்டையை இந்தாண்டு மார்ச் மாதம் வரை பயன்படுத்தலாம் - ஆட்சியர் அறிவிப்பு!!

மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து அட்டையை இந்தாண்டு மார்ச் மாதம் வரை பயன்படுத்தலாம் - ஆட்சியர் அறிவிப்பு!!

கொரோனா நோய் தொற்று காரணமாக 2019-2020ம் நிதியாண்டில் வழங்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டையினை மார்ச்-2021 வரையில் புதுப்பிக்காமல் பயன்படுத்திக் கொள்ளலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக 2019-2020 ஆம் அண்டில் பார்வைதிறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மாவட்டம் முழுவதும் சென்று வருவதற்கும் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிப்புரியும் மாற்றுத்திறனாளிகள், பள்ளி/ கல்லூரிகளுக்கு செல்லும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ள வழங்கப்பட்ட பயண சலுகை அட்டையினை கோவிட் -19 தொற்று ஏற்படுவதை தவிர்த்திடும் வகையில் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஆண்டில் 2019-2020ல் வழங்கப்பட்ட அரசு பேருந்து பயண சலுகை அட்டையினை இவ்வாண்டும் தொடந்து மார்ச் -2021 மாதம் வரையில் புதுபிக்காமல் பயன்படுத்தி கொள்ளலாம்.

Advertisement

மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண் (0431-2412590 தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு‌ தெரிவித்துள்ளார்.