நவம்பர் 1ம் தேதி முதல் ரயில்களில் முன்பதிவு இன்றி பயணிக்கலாம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

நவம்பர் 1ம் தேதி முதல் ரயில்களில் முன்பதிவு இன்றி பயணிக்கலாம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் மீண்டும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக  கடந்தாண்டு முதல் தற்போது வரை முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே ஊரடங்கு தளர்வுகளில் பேருந்துகளில் 100% பயணிகள் பயணிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை ஏற்ற தெற்கு ரயில்வே சார்பில் முதற்கட்டமாக 23 ரயில்களில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் முன்பதிவு இன்றி பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளது. அதன்படி ராமேஸ்வரம் - திருச்சி, திருச்சி - ராமேஸ்வரம், சென்னை - ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை - சென்னை, பாலக்காடு டவுன் - திருச்சி, திருச்சி - பாலக்காடு டவுன்,

கண்ணூர் - கோவை, கோவை - கண்ணூர், நாகர்கோவில் - கோட்டயம், கோட்டயம் - நாகர்கோவில், கோவை - மங்களூர், மங்களூர் - கோவை, நாகர்கோவில் - கோவை, கோவை - நாகர்கோவில், திருச்சி - திருவனந்தபுரம், திருவனந்தபுரம் - திருச்சி ஆகிய ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் சேர்க்கப்படவுள்ளது. தீபாவளி பண்டிகை வருவதால் ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் இந்த அறிவிப்பு ரயில் பயணிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn