லுங்கியில் கடத்திவரப்பட்ட 6 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

லுங்கியில் கடத்திவரப்பட்ட 6 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆண் பயணி கொண்டு வந்த உடைமைகளை சோதனை செய்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த லுங்கியை அதிகாரிகள் கைப்பற்றினர். பின்னர் லுங்கியை அதிகாரிகள் சோதனை செய்ததில் தங்கத்தை கலந்து சாயம் பூசப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த லுங்கியில் இருந்து தங்கத்தை பிரித்தெடுத்தனர்.

அதில் 6 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சுமார் 128 கிராம் எடையிலான தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த ஆண் பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO