பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்  பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி

பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்  பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி

மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க சென்னை அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்துடன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணைந்து ஆண்டு தோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆயத்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் www.fisheries.tn.gov.in என்ற மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி 
விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி மையமாக சென்னையை தேர்ந்தெடுக்க 
வேண்டும்.

மீனவர் சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் அகில 
இந்திய பயிற்சி மையத்தின் இணையதளத்தில் (www.civilservicecoaching.com) 2021 டிசம்பர் 28 மாலை 6.00 மணி வரை விண்ணப்பித்தப்பிறகு அவர்கள் பெற்றிடும் பதிவு எண் மற்றும் உரிய 
ஆவணங்களை சம்பந்தப்பட்ட திருச்சி (மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவர் 
நலத்துறை துணை இயக்குநர் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை 
உதவி இயக்குநர் அலுவலகங்களில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் எண்.4 காயிதே மில்லத்தெரு, காஜாநகர், திருச்சி-20 (தொலைபேசி எண் (0431-2421173) அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn