திருச்சி மாவட்டத்தில் 37 தேர்வு மையங்களில் குரூப்-1 மற்றும்1A தேர்வு

திருச்சி மாவட்டத்தில் 37 தேர்வு மையங்களில்  குரூப்-1 மற்றும்1A தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு   குரூப் 1 மற்றும் 1A யில் அடங்கிய பல்வேறு பதவிக்கான போட்டி தேர்வு வரும் (15. 06.2025) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9:30 முதல் 12 30 மணி வரை நடைபெற உள்ளது.

 திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 37 தேர்வு மையங்களில்  10042 நபர்கள் இத்தேர்வினை எழுத உள்ளனர்.இப்பணிகளுக்கு என 37 தேர்வு மையம் முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இப்போட்டி தேர்வு வினாத்தாள் மற்றும் இடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள 11 இயங்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 இக்குழுவில் துணை வட்டாட்சியர் நிலையில் ஒரு அலுவலர் ஆயுதம் ஏந்திய ஒரு காவலர் ஆகியோர் இயங்குவர் ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் தேர்வை கண்காணிக்கும் பொருட்டு 37 ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெறுவதை பதிவு செய்திட வீடியோகிராபர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 அனைத்து தேர்வு மையங்களும் காவல்துறை மூலம் பாதுகாப்பு பணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.தேர்வு எழுத வரும் தேர்வாளர்கள் செல்லிடை பேசி உள்ளிட்ட எவ்வித மின்னணு சாதனங்களும் தேர்வு மையத்திற்குள் எடுத்து வர அனுமதி இல்லை.

 என்றும் முற்பகல் 9 மணிக்கு பின்னர் தேர்வு கூடத்திற்குள் வரும் எந்த ஒரு தேர்வையும் தேர்வரையும் எக்காரணத்தை கொண்டும் தேர்வு கூட்டத்திற்குள் அனுமதிக்க இயலாது என்றும் தேர்வாணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision