எங்கள் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு தளபதி விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தான் காரணம்

எங்கள் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு தளபதி விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தான் காரணம்

திருச்சி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற மூத்த நிர்வாகிகள் புறக்கணிக்கப்படுவதாகவும், விஜய் ரசிகர் மன்ற மாநில பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி மாவட்டத் தலைமை தளபதி விஜய் ரசிகர் மாவட்ட , ஒன்றிய நிர்வாகிகள் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசுகையில்... கடந்த 5 ஆண்டுகளாக விஜய் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாததற்கு காரணம் விஜய் ரசிகர் மன்ற மாநில பொது செயலாளர் புஸ்லி ஆனந்த் தான். மூத்த நிர்வாகிகள் எந்த ஒரு நல திட்டமும் செய்ய விடாமல் தடுக்கிறார். தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேரியிலும் இது தொடர்பான பிரச்சினை நிலவி வருகிறது.

செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்ட பிறகு எங்கள் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணமும் தளபதி விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தூண்டுதலின் பேரில் தான் நடக்கும்.

பல்வேறு பிசி ஷெட்யூலில் இருக்கும் விஜய்க்கு இது குறித்த எதுவும் தெரியாது. எனவே செய்தியை பார்க்கும் நடிகர் விஜய்  ரசிகர் மன்றத்தில் நடைபெறும் பிரச்சினைகள் குறித்து உரிய விசாரணை எடுக்க வேண்டுமென கோரிக்கை முன்வைத்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn