பாலியல் குற்றச்சாட்டில் திருச்சி மருத்துவர் மீது வழக்கு பதிவு - கைது

பாலியல் குற்றச்சாட்டில் திருச்சி மருத்துவர் மீது வழக்கு பதிவு - கைது

திருச்சியில் கடந்த 6மாத காலமாக, பள்ளி விடுதி மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக, மருத்துவர் சாம்சன் mbbs (31) என்பவர் மீது கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர் சாம்சனின் தாயார் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் உதவி மையம் 1098ல் பெறப்பட்ட தகவலின் பேரில், திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision