திருச்சியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவரின் ஓட்டு கள்ள ஓட்டாக போடப்பட்டதால் பரபரப்பு

திருச்சியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவரின் ஓட்டு கள்ள ஓட்டாக போடப்பட்டதால் பரபரப்பு

திருச்சியில் இன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வார்டு எண் 26 இல்  3 மணி அளவில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த  ஒருவரின்  வாக்கு பதிவாகியுள்ளது. அவர் மாலை 5 மணியளவில்  தன்னுடைய வாக்கினை செலுத்த வந்த போது ஏற்கனவே ஒருவர் தன்னுடைய வாக்கை செலுத்தி இருப்பதை அறிந்து அங்கு சற்று நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

அவருக்கு மீண்டும் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று போலீசார் கூறியும் போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.me/trichyvisionn