ஸ்ரீரங்கம் பகுதியில் ஓடிய யானை - பரபரப்பு

ஸ்ரீரங்கம் பகுதியில் ஓடிய யானை - பரபரப்பு

பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான இந்த யானை திடீரென ஶ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே உள்ள மூலதோப்பு பகுதி மற்றும் காவலர் குடியிருப்பு பகுதி ராகவேந்திரர் மடம் உள்ளிட்ட பகுதிகளில் தனியாக சத்தம் போட்டுக்கொண்டே ஓடி உள்ளது. இதனால் பொது மக்கள் பயத்துடன் வீடுகளுக்குள்ளும் கடைகளிலும் புகுந்து கொண்டனர்.

பின்பு யானையை கட்டுப்படுத்தி அமைதியான பிறகு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். யானையை சரியாக பராமரிப்பதில்லை எனவும்  பொதுமக்களிடம் பிச்சை எடுக்க  வைப்பது சரியாக உணவளிக்காத காரணத்தால் யானை கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn