திருச்சி அரசு மருத்துவமனையில் பல்வேறு பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு

திருச்சி அரசு மருத்துவமனையில் பல்வேறு பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு

திருச்சி அரசு மருத்துவமனையில் தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, மது மீட்பு மையம், நுண்ணுயிரியல் துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. 

சமூக பணியாளர், டெக்னீசியன், உளவியலாளர், லேப் அசிஸ்டன்ட் உள்பட பல்வேறு பணிகளுக்கு உரிய கல்வி தகுதி உடையோர் விண்ணப்பிக்கலாம் என கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு செய்யப்பட் டிருந்தது.

இந்தநிலையில் நேற்று நடந்த நேர்முகத்தேர்வுக்கு 300-க்கும் மேற்பட்டவர்கள் உரிய சான்றிதழ்களுடன் பங்கேற்றனர். அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா, கல்லூரி துணை முதல்வர் ஆர்சியா பேகம் ஆகியோர் தலைமையில் மருத்துவ பேராசிரியர்கள் கொண்ட குழுவினர் சான்றிதழ்களை சரிபார்த்து தகுதி வாய்ந்த ஆட்களை தேர்வு செய்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn