திருச்சி அருகே திருட முயன்ற கேரளா இளைஞர்கள் - பொதுமக்கள் மீது கொலை வழக்கு பதிவு!!

திருச்சி அருகே திருட முயன்ற கேரளா இளைஞர்கள் - பொதுமக்கள் மீது கொலை வழக்கு பதிவு!!

திருச்சி அல்லூர் கிராமத்தில் கேரளாவை சேர்ந்த அரவிந்த் (25), திபூர் (30) ஆகியோர் வீடுகளுக்குள் புகுந்து திருட முயன்றதாகக் கருதி, அவர்களை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.

Advertisement

அப்போது , அதில் ஒருவர் பொதுமக்களைக் கண்டதும் தப்பி ஓடியுள்ளார். மற்றோரு நபர் அங்கு கிடந்த மரக்கட்டையால், பொதுமக்களையும், அங்கிருந்த இருசக்கர வாகனங்களையும் தாக்கியுள்ளார். இதில் அக்கிராமத்தைச் சேர்ந்த சாம்பசிவம், ராதா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் 7 இருசக்கர வாகனங்களை மர்ம நபர் சேதப்படுத்தியுள்ளார்.

பொதுமக்கள் திருப்பி தாக்கியதில், திபூர் படுகாயமடைந்து பிடிபட்டார். படுகாயமடைந்த அந்த நபரை கயிற்றால் கட்டி சரக்கு வாகனத்தில் கொண்டுவந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பொதுமக்கள் சேர்த்தனர்.

Advertisement

இது குறித்து அரசுமருத்துவமனை காவல் நிலைய போலீசார், ஜீயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதற்குள் தப்பி ஓடிய மற்றொரு நபரையும் பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து ஜீயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் திருட வந்த போது பொது மக்களைத் கண்மூடித்தனமாக தாக்கி விட்டு, தப்பிச் செல்ல முயற்சித்த போது பொதுமக்களால் பிடிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் கேரள இளைஞர் தீபூர் உயிரிழந்தார். கைதான அரவிந்த்திடம் ஜீயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

Advertisement

தலையில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழப்பு என்றும் உடற்கூறாய்வில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஜீயபுரம் காவல் நிலையத்தில் அல்லூர் பொது மக்கள் 10 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.