தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது -முன்னாள் அமைச்சர் திருச்சியில் பேட்டி

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது -முன்னாள் அமைச்சர்  திருச்சியில் பேட்டி

ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரை சந்திக்க முன்னாள் அமைச்சர்கள் தங்கணி மற்றும் சிவி சண்முகம் ஆகியோர் திருச்சி மத்திய சிறைக்கு வருகை தந்துள்ளனர் .

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில்..... கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதை தடுப்பதற்கு ஒன்றும் செய்யாமல் காவல்துறையை தமிழக முதல்வர் கையில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சி மீது பொய் வழக்குகள் போட்டு அடக்கி விடலாம் ஒடுக்கி விடலாம் என நினைக்கிறது அது எப்போதும் நடக்காது.

இன்றைக்கு முன்னாள் அமைச்சர் மீது பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது விரைவில் நீதிமன்றத்தில் அவரை நிரபராதி என்று நிரூபித்து அவர் விரைவில் வெளியே வருவார். தமிழகத்தில் சட்டம் இருந்து சந்தி சிரிக்கிறது. திமுகவின் உடைய கூட்டணிக் கட்சி என்னுடைய கொலை வழக்கிலேயே இன்னும் குற்றவாளிகள் பிடிக்கவில்லையே என்ற கேள்விக்கு? அதை கூட்டணி கட்சியினரிடம் கேளுங்கள்  என்றார்...

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision