திருச்சியில் நெல் அறுவடை எந்திரம் திருட்டு

திருச்சியில் நெல் அறுவடை எந்திரம் திருட்டு

பெரம்பலூர் மாவட்டம் உடுப்பியம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக திருச்சி மாவட்டம் பாலக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நெல் அறுவடை எந்திரம் மூலம் நெல் அறுவடைப் பணியில் ஈடுபட்டு வருகிறார். அந்த நெல் அறுவடை எந்திரத்தை பாலக்குறிச்சியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நிறுத்தி வைப்பது வழக்கம்.

இந்நிலையில் வழக்கம்போல் நெல் அறுவடை எந்திரத்தை அங்கு நிறுத்தி விட்டு ஊருக்கு சென்று இருந்தார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது அந்த எந்திரத்தை காணாமல் போனது தெரிய வந்தது. இதனையடுத்து அறுவடை எந்திரம் திருடி போனது குறித்து வளநாடு காவல் நிலையத்தில் வெங்கடேசன் அளித்த புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் அறுவடை எந்திரத்தை திருடியவர்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு தேடி வருகின்றனர். திருடு போன எந்திரத்தின் மதிப்பு 25 லட்சம் என கூறப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn