உலகச் சுற்றுச்சூழல் தினம் - திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு பசுமை விருது

உலகச் சுற்றுச்சூழல் தினம் - திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு பசுமை விருது

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று (05.06.2025) சென்னை வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தினவிழாவில் மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக

 சிறப்பாக செயலாற்றிய திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் எம். பிரதீப் குமார் அவர்களுக்கு பசுமை விருது வழங்கினார். இந்நிகழ்வின் போது நிதி சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,குழு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன்,

வனத்துறை மற்றும் காதி அமைச்சர் ஆர் எஸ் ராஜ கண்ணப்பன், சுற்றுச்சூழல் மற்றும் கால சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு சுற்றுச்சூழல் மற்றும் கால்நடை மாற்றத்துறை இயக்குனர் ரா ராகுல்நாத், முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் வனத்துறை தலைவர்

 ஸ்ரீநிவாஸ் ரெட்டி, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை பண உயிரின காப்பாளர் ராஜேஷ் குமார்,தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் எம் ஜெயந்தி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision