7 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிய நபர் குண்டர் சட்டத்தில் கைது

7 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிய நபர் குண்டர் சட்டத்தில் கைது

திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, உத்தரவின்பேரில் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில் திருட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறி செய்யும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் சரக உதவி ஆணையர்கள் சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கியுள்ளார்கள்.

அதன்படி கடந்த (19.02.2024)-ந் தேதி, பாலக்கரை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மணல்வாரித்துறை பொது கழிப்பிடம் அருகில் நடந்து சென்ற லோடுமேனிடம் கத்தியை காண்பித்து பணத்தை வழிப்பறி செய்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்தும், விசாரணை செய்ததில் சம்பவத்தில் ஈடுப்பட்டதாக திருவானைக்கோயில் அழகிரிபுரத்தை சேர்ந்த அப்துல் அஜீஸ் (எ) வெள்ளை ராஜா (42), த.பெ.முகமது அலி மற்றும் மூன்று நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், விசாரணையில், மேற்படி அப்துல் அஜீஸ் (எ) வெள்ளை ராஜா மற்றும் 3 நபர்கள் கடந்த (17.02.2024)ந் தேதி தனியார் மாநகர பேருந்தில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளுடன் கூடிய டிராவல் பேக்கில் வைத்துக்கொண்டு பயணிந்த தனியார் மார்க்கெட்டிங் மேலாளரிடம் பேக்கை திருடி வழக்கில் சம்மந்தப்பட்டிருப்பது தெரிந்து, எதிரி மற்றும் 3 நபர்கள் கைது செய்யப்பட்டு, மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரிய வந்தது. தங்க நகைகள் கைப்பற்றி நடவடிக்கை

மேலும் எதிரி அப்துல் அஜீஸ் (எ) வெள்ளை ராஜா மீது கோட்டை காவல்நிலையத்தில் 4 திருட்டு வழக்குகளும், தில்லைநகர் காவல் நிலையத்தில் 8 திருட்டு வழக்குகள் மற்றும் 5 வழிப்பறி வழக்குகளும், ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் ஒரு அடிதடி வழக்கு, ஒரு திருட்டு வழக்கு, திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல்நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளும், ரயில்வே காவல்நிலையத்தில் ஒரு வழிப்பறி வழக்கு உட்பட 23 வழக்குகளும் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

எனவே எதிரி அப்துல் அஜீஸ் (எ) வெள்ளை ராஜா என்பவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பாலக்கரை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகளுக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் மேற்படி திருட்டில் ஈடுபட்டதாக சூசைராஜ், ஷேக் தாவுத், யாசர் அராபாத் ஆகிய மூன்று நபர்கள் மீது திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் ஆணையின்படி ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்ற வழிப்பறி மற்றும் கொள்ளை குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision