திருச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண நிதியுதவி திட்டம் - விண்ணப்பங்கள் வரவேற்பு!!

திருச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண நிதியுதவி திட்டம் - விண்ணப்பங்கள் வரவேற்பு!!

திருச்சி மாவட்டத்தில், 2020-2021-ம் நிதியாண்டிற்கு 4 வகையான திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் திருமண நிதியுதவி வேண்டி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement

கை, கால் பாதிக்கப்பட்டோரை நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் புரிவதற்கான திருமண நிதியுதவி திட்டம், பார்வையற்றோரை நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் புரிவதற்கான திருமண நிதியுதவி திட்டம், காது கேளாத மற்றும் வாய்பேசாதோரை நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் புரிவதற்கான திருமண நிதியுதவி திட்டம், மாற்றுத்திறனாளியை மாற்றுத்திறனாளி திருமணம் புரிவதற்கான திருமண நிதியுதவி என நான்கு வகையான திட்டத்தின் கீழ் திருமண நிதியுதவி மற்றும் தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

எனவே, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருமணம் புரிந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ .25000 மற்றும் 8 கிராம் தங்க நாணயமும், தம்பதியரில் எவரேனும் ஒருவர் பட்டம் அல்லது பட்டய படிப்பு படித்தவராக இருந்தால் ரூ .50000 மற்றும் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் திருமணம் நடைபெற்ற ஒராண்டுக்குள் இவ்வலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று உரிய சான்றுகளான மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகல், திருமண அழைப்பிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குடும்ப அட்டையின் நகல், கல்வி சான்றின் நகல் மற்றும் தம்பதியர் இருவருக்கும் இதுவே முதல் திருமணம் என்பதற்கான சான்று

(கிராம நிர்வாக அலுவலரிடம் பெற வேண்டும்) ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல

அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். 

இத்திட்டத்தில் பயனையும் விரும்பும் நபர்கள் சமூக நலத்துறை மூலமாக வழங்கப்படும் திருமண நிதியுதவித்திட்டங்களில் பயன்பெறாத நபர்களாக இருத்தல் வேண்டும். மேற்காணும் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் திருச்சிராப்பள்ளி கண்டோன்மென்ட், மாவட்ட நீதிமன்ற வளாகம் பின்புறம், அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பிக்குமாறும், மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 0431-2412590-ல் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார்.