மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே தின விழா கொடியேற்றி சிறப்பித்தனர்.

மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி சார்பில் மே தின விழா கொடியேற்றி சிறப்பித்தனர்.

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு தொழிற்சங்கங்கள் சமூக அமைப்புகள் சார்பில் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி மே தின விழாவை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சியில் மார்க் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதி குழு திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் திருச்சியில் பல்வேறு இடங்களில் கொடியேற்றி மே தின விழா கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மேற்கு பகுதி செயலாளர் எம் ஐ ரபிக் அஹமது தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்ட செயற்குழு ராமச்சந்திரன், மாவட்ட குழு சீனிவாசன், பகுதி குழு உறுப்பினர்கள் வள்ளி, கணேசன், அப்துல் கையூம் பகுதி குழு உறுப்பினர் ஹரி பாஸ்கர் தலைவர்கள் நடராஜன், பழனியப்பன், மற்றும் பகுதி குழு உறுப்பினர்கள் சி.பி.எம்.சி.ஐ.டி.யூ. தலைவர்கள் கலந்து கொண்டு பல்வேறு இடங்களில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn