இணைய வழியில் நடைபெற்ற மக்கள் சக்தி இயக்கத்தின் உறுப்பினர் கூட்ட நிகழ்ச்சி

இணைய வழியில் நடைபெற்ற மக்கள் சக்தி இயக்கத்தின் உறுப்பினர் கூட்ட நிகழ்ச்சி

திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் உறுப்பினர் கூட்டம் இணையவழியில் கடந்த 19ஆம் தேதியன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் மாவட்ட செயலாளர் ஸ்டுடென்ட்ஸ் இளங்கோ, மாநில துணை பொதுச் செயலாளர் சந்திரசேகர், மகளிரணி நிர்வாகி தரணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முனைவர் எல்.பாஸ்கரன் சிறப்புரையாற்றினார். மேலும் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பச்சைமலை போன்ற பின்தங்கிய பகுதியில் பள்ளி படிப்பினை முடிக்கும் மாணவர்களின் நலன் கருதி அப்பகுதியில் அவர்களின் திறனை வெளிக் கொண்டு வரும் வகையில் ஒரு தொழிற் பயிற்சி நிறுவனம் உருவாக்கப்பட வேண்டும்.

மக்கள் சக்தி இயக்கம் நடத்தும் பயிற்சி வகுப்புகள் மூலம் பயிற்சி பெறும் இளைஞர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று தேர்வில் தோல்வியை தழுவினாலும், சுயத்தொழில் தொடங்குவதற்கான தன்னம்பிக்கை மற்றும் பயிற்சி வழங்குவது.

மாண்புமிகு முதல்வர் மற்றும் மாநில கல்வி அமைச்சர்கள் அறிக்கை மூலம் அரசு பள்ளிகளில் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்திட கோரிக்கையை வைப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF