அமைச்சர் செந்தில் பாலாஜியின் குடும்பத்தினர் திருச்சியில் சாமி தரிசனம்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் குடும்பத்தினர் திருச்சியில் சாமி தரிசனம்

அமலாக்கத்துறை சோதனையால் கைது செய்யப்பட்டதும் நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இருதைய அறுவை சிகிச்சை நடைபெற்றது. 

இந்நிலையில் அவர் உடல் நலம் பெற வேண்டி அவரது தந்தை-தாய் மற்றும் மனைவி ஆகியோர் திருச்சி திருவெறும்பூர் துவாக்குடி அருகே உள்ள திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமான இடர்களை களையும் திருநெடுங்களநாதர் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தனர்.

திருநெடுங்களநாதருக்கு அர்ச்சனை செய்து வழிபட்ட பின் பிரகாரத்தில் உள்ள வராகி அம்மனையும், ஏனைய பரிவார தெய்வங்களையும் வணங்கி சென்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision