தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய பேருந்து வழி தடத்தை துவக்கிய அமைச்சர்

தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய பேருந்து வழி தடத்தை துவக்கிய அமைச்சர்

தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டிற்காக புதிய பேருந்து வழித்தடத்தை இன்று துவக்கி வைத்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூத்தை பார்பேரூராட்சியில் பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் காலை நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்வதற்கு சிறப்பு பேருந்து வேண்டி திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம் கூத்தைபார் கிராம மக்கள்கோரிக்கை விடுத்திருந்தனர் 

மேலும் இந்த கோரிக்கையை ஏற்று இன்று காலை பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கூத்தைப்பார் கிராமத்தில் புதிய பேருந்து வழித்தடத்தை துவக்கி வைத்து பேருந்திலும் பயணம் செய்தார் தமிழக பள்ளிகளுக்கு அமைச்சர்

மேலும் இந்த அரசு பேருந்து துவாக்குடி நகர் கிளை நகர பேருந்து வழித்தடத்தில் இருந்து அன்றாடம் காலை 7 .40 மணிக்கு துவாக்குடியில் இருந்து புறப்பட்டு திருவெறும்பூர் வழியாக கூத்தைபார் வந்தடைகிறது 

மேலும் கூத்தைபார் வரும் பேருந்தானது 8:20 க்கு புறப்பட்டு கூத்தாப்பார் கிராமத்திலிருந்து திருவெறும்பூர் ,மார்க்கெட், பாலக்கரை வழியாக சத்திரம் நோக்கி செல்கிறது அன்றாடம் இரண்டு முறை இந்த போக்குவரத்து வசதி நடைபெற்று வரும் என்றும் போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் சார்பில் கூறப்பட்டுள்ளது

மேலும் இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே என் சேகரன்

திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி 

கூத்தாப்பர் பேரூராட்சி தலைவர் செல்வராஜ் ,கூத்தாப்பர் பேரூராட்சி செயலாளர் தங்கவேல் மற்றும் அரசு போக்குவரத்து திருச்சி மண்டலம் நிர்வாக இயக்குனர் பொன்முடி ,பொது மேலாளர் முத்துகிருஷ்ணன், துணை மேலாளர் சுரேஷ்குமார் ,துவாக்குடி நகர கிளை மேலாளர் ராஜேந்திரன் உட்பட கட்சி நிர்வாகிகள், போக்குவரத்து துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து  கொண்டனர்.#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision