மாணவரிடம் கத்தியை காட்டி வழிப்பறி- மிரட்டிய இருவருக்கு ஏழு ஆண்டு சிறை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கடந்த (25. 07.2021) ஆம் தேதி எ.புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அரசு காலணியில் கல்லூரியில் படிக்கும் மாணவர் மற்றும் அவரது நண்பருடன் சேர்ந்து இயற்கை உபாதை கழிக்க சென்றபோது அவர்களிடம் இரண்டு நபர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கத்தியை காண்பித்து மிரட்டி
அவர்களிடமிருந்த செல்போன்கள் ஏடிஎம் கார்டு மற்றும் பணம் 3,700 ஆகியவற்றை வழிப்பறி செய்து சென்றதாகவும் நடவடிக்கை எடுக்க கோரி கொடுத்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபுதாஹீர் முகமது யாகூப் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த வழக்கை புலன் விசாரணை செய்து விரைந்து முடிக்கப்பட்டு கடந்த (18/08/2021) ஆம் தேதி இருவரின் மீதும் குற்றப் பத்திரிக்கையை புலன்விசாரணை செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். இவ்வழக்கில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் அவர்களால் ஏழு வருடம் சிறை தண்டனையும் ₹5000 அபராதமும் விதிக்கப்பட்டது.அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 3 மாத காலம் மெய் காவல் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
இவ்வழக்கில் சிறப்பு புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நீதிமன்ற சாட்சிகளை குறித்த காலத்தில் ஆஜர் படுத்தியும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களையும் திருச்சி மாநகர காவல் ஆணையர் நா காமினி அவர்கள் வெகுவாக பாராட்டினார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision