தேசிய ஒற்றுமை நாள் மினி மாரத்தான்

தேசிய ஒற்றுமை நாள் மினி மாரத்தான்


திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உலக தேசிய ஒற்றுமை நாள் முன்னிட்டு மணப்பாறை அரசு ஆண்கள் பள்ளி மாணவ - மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கிய மாரத்தான் போட்டியினை காவல் துணை கண்காணிப்பாளர் ந.ராமநாதன், நகர்மன்ற தலைவர் கீதா. ஆ.மைக்கேல்ராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.

தலைமையாசிரியர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற ஓட்டம் பள்ளியிலிருந்து தொடங்கி மதுரை சாலை வழியாக பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை வந்தடைந்து, பின் மீண்டும் பள்ளியை சென்றடைந்தது. ஓட்டத்திற்கு காவல் ஆய்வாளர் ஜே.கே.கோபி தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.



#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...  https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0


#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO