திருச்சியில் புதிய மல்லர் கம்ப விளையாட்டு பயிற்சி பட்டறை

திருச்சியில் புதிய மல்லர் கம்ப விளையாட்டு பயிற்சி பட்டறை

திருச்சி மாவட்ட மல்லர் கம்ப கழகத்தின் புதிய மல்லர் கம்ப விளையாட்டின் பயிற்சி பட்டறை தென்னக ரயில்வே மைதானம் கல்லுக்குழியில் 15.4.2023  தொடங்கப்பட்டது.

 இவ் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தென்னக ரயில்வே கோட்ட இயக்கவியல் மேலாளர் மற்றும் தென்னக ரயில்வே விளையாட்டு கழகம் திருச்சி கோட்ட செயலாளர்  மு. ஹரிகுமார் (ஐ. ஆர். டி. எஸ்)மற்றும் தென்னக ரயில்வேயின் திருச்சி விளையாட்டு அரங்கத்தின் பொறுப்பாளர் அ.தமிழரசன்  மற்றும் திருச்சி மாவட்ட மல்லர் கம்பர் கழகத்தின் சார்பாக பொதுச் செயலாளர் த.ல. விசு, பொருளாளர் சு.ஆறுமுகம், துணைச் செயலாளர் வீ.சத்யா துணைத் தலைவர்கள் ரெ.காளிதாஸ், ம.வே. சாமி ஆகியோர்கள் கலந்து கொண்டனர் இவ்விழாவில் மல்லர் கம்ப வீரர்கள் மல்லர் கம்பர் செயல் விளக்க சாகசங்களை நிகழ்த்தினார்கள்

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn