திருச்சி மாவட்டத்தில் புதிய நீதிமன்ற திறப்பு

திருச்சி மாவட்டத்தில் புதிய நீதிமன்ற திறப்பு

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, போலீஸ் எஸ்பி சுஜித் குமார் ஆகியோர் முன்னிலையில் திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி பாபு புதிதாக அமைக்கப்பட்ட நீதிமன்ற விசாரணை அரங்கையும், கல்வெட்டு ஆகியவற்றையும் திறந்து வைத்து பேசினார்.

அப்போது தலைமை குற்றவியல் நடுவர் சாந்தி முதன்மை சார்பு நீதிபதி விவேகானந்தன், முசிறி அரசு வழக்கறிஞர் சப்தரிஷி, முசிறி வழக்கறிஞர் சங்கத் தலைவர் பாஸ்கர், செயலாளர் சந்திரசேகர், துணைச் செயலாளர் தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO