திருச்சியில் 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார், VAO கைது

திருச்சியில் 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார், VAO கைது

திருச்சி மாவட்டம்கல்லக்குடி பகுதியை சேர்ந்தவர் நடராஜன் மனைவி லட்சுமி. இவர் தனது பட்டாவில் பிழை இருப்பதாக திருத்தம் செய்ய லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்தை நாடியுள்ளார். வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் இருவரும் பிழை திருத்தம் செய்ய 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வேண்டும் என கேட்டுள்ளனர். இதை கொடுக்க மனமில்லாத லட்சுமி திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையினர் நாடியுள்ளார்.

15,000ரூபாய் லஞ்சம் கேட்ட துணை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலரிடம் பத்தாயிரம் ரூபாய் தருகிறேன் என்று பேசியுள்ளார். இன்று காலை வட்டாசியர் அலுவலகத்தில் கொடுத்த பொழுது திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை கண்காணிப்பாளர் மணிகண்டன் மற்றும் ஆய்வாளர் சக்திவேல் உள்ளிட்டவர்கள் லட்சுமியிடம் துணை தாசில்தார் பிரபாகரன், முதுவத்தூர் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் லஞ்சம் வாங்கிய பொழுது பிடிபட்டனர். தற்போது அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO