கடந்த 4 நாட்களாக ஶ்ரீரங்கம் கோவிலுக்கு பக்தர்களின் வருகை எண்ணிக்கை

கடந்த 4 நாட்களாக ஶ்ரீரங்கம் கோவிலுக்கு பக்தர்களின் வருகை எண்ணிக்கை

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீ பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஆண்டுதோறும் ஒவ்வொரு மாதமும் விழாக்கள் நடைபெற்று வருவது. வழக்கம் இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குறிப்பாக தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் 03.11.21-ம் தேதி - 7,187 பக்தர்களும், 04.11.21-ம் தேதி 19530 பக்தர்களும், 05.11.21-ம் தேதி - 31,759 பக்தர்களும் 2021-ம் ஆண்டின் உச்சபட்ச பக்தர்களின் வருகை நேற்று 06.11.21-ம் தேதி - 45,708 பக்தர்களும் வருகை தந்துள்ளனர். கடந்த 4 நாட்களின் பக்தர்களின் வருகை மொத்தம் 1,04,184 பேர் வருகை புரிந்துள்ளனர்.

தீபாவளி பண்டிகைக்காக தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தின் பல்வேறு ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision