திருச்சி மாநகராட்சியில் இரண்டு நாளைக்கு குடிநீர் கட்!!

திருச்சி மாநகராட்சியில் இரண்டு நாளைக்கு குடிநீர் கட்!!

Advertisement

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துளள்ள  தரைமட்ட நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் 900 எம்.எம் விட்டமுள்ள பிரதான நீர் உந்து குழாயில், சர்கார்பாளையம் பகுதியில்  ஏற்பட்டுள்ள உடைப்பினை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகின்றது.

Advertisement

இதனால் ஸ்ரீரங்கம் கோட்டத்திற்குட்பட்ட சஞ்சீவிநகர், தேவதானம் அரியமங்கலம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளான விறகுபேட்டை, மகாலெட்சுமி நகர், மலைக்கோயில், நேருஜீநகர், அரியமங்கலம் உக்கடை, அரியமங்கலம் கிராமம், ஜெகநாதபுரம், மலையப்பநகர், ரயில் நகர், செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம், பொன்மலைக்கோட்டத்திற்குட்ட பகுதிகளான  முன்னாள் இராணுவத்தினர் காலனி, விவேகானந்த நகர், ஜே.கே.நகர், மேலகல்கண்டார்கோட்டை, பொன்னேரிபுரம், கல்லுக்குழி, பொன்மலைப்பட்டி, மத்திய சிறைச்சாலை, சுப்ரமணியபுரம், விமானநிலையம் பகுதி, காமராஜ் நகர்,  செம்பட்டு, காஜாநகர், காஜாமலை, கே.கே.நகர்,தென்றல் நகர், ஆனந்த் நகர், சத்தியவாணி முத்து நகர்,  ஐயப்பநகர்  போன்ற பகுதிகளுக்கு நாளை ( 30.01.2021) மற்றும் நாளை மறுநாள் (31.01.2021) ஆகிய இருதினங்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது. 

Advertisement

மீண்டும் 01.02.2021 அன்று வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். இதனால் பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்தி, மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறு மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement