போதையில் ஆட்டோவில் வந்த 5 பேரில் ஒருவர் உயிரிழப்பு 4 பேர் படுகாயம்

போதையில் ஆட்டோவில் வந்த 5 பேரில் ஒருவர் உயிரிழப்பு 4 பேர் படுகாயம்

திருச்சி கே.கே.நகர் காவல் நிலையம் பகுதி ரிங்ரோடு பாரி நகரில் ஐந்து நபர்கள் பதிவு எண் TN45 BE 0811 உள்ள ஆட்டோவில் வேகமாக வந்தனர். அப்போது நிலைதடுமாறிய ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 

உடனிருந்த 4 நபர்கள் படுகாயம் அடைந்தனர். பின்னர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் ஆட்டோவில் வந்த 5 பேரும் மது போதையில் இருந்ததாக தெரிகிறது.

இந்த விபத்து குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO