திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில்  இணையவழி ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி

திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில்  இணையவழி ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி

திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் ஆசிரியர்களுக்கான  திறன் மேம்பாட்டு பயிற்சி இணையவழியில் நடைபெறுகிறது.அக்டோபர் 18 முதல் 23 வரை ஆறு நாட்கள் தொடர்ந்து  மாலை  3 மணி முதல் 5 மணிவரை இணையவழியில்  ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

  
கல்லூரியின் ஆங்கிலத்துறை  முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை சார்பில் 6 நாட்கள் சர்வதேச ஆசிரியர் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து உள்ளனர்.
 இந்நிகழ்ச்சியில் ஓமன் , ஜார்கண்ட், சென்னை திருச்சிராப்பள்ளியை  சேர்ந்த  வல்லுனர்கள் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி   அளிக்க உள்ளனர்.


கொரானா காலகட்டத்தில்  பல்வேறு நெருக்கடிகளை சந்தித்திருந்தாலும் கற்றல் முறையில் இந்த இணையவழி கற்றல் மிகப்பெரிய உதவிகரமாக அமைந்துள்ளது.டிஜிட்டல் முறையை பயன்படுத்தி இன்று உலகளாவிய அளவில் கல்வி கற்றலை ஒருங்கிணைக்க உதவியுள்ளது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn