முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த மக்கள் - உடனடி நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர்

முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த மக்கள் - உடனடி நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர்

தமிழ்நாடு முதலமைச்சர் (09.06.2023) அன்று திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு வருகை புரிந்த போது லால்குடி வட்டத்திற்குட்பட்ட ஆலங்குடி மகாஜனம் கிராம பொது மக்கள் பேருந்து வசதி வேண்டி நேரடியாக கோரிக்கை வைத்தனர்.

இதன் அடிப்படையில் அக்கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள ஆணையிட்டார். அதன்படி காலை 8:00 மணி மற்றும் மாலை 5:30 மணிக்கு லால்குடியிலிருந்து ஆலங்குடி மகாஜனத்திற்கும்,

காலை 8:35 மணி மற்றும் மாலை 06:05 மணிக்கு ஆலங்குடி மகாஜனத்திலிருந்து லால்குடிக்கும் என தினசரி 4 நடைகள் இப்பேருந்து சேவை உடனடியாக (10.06.2023) முதல் இயக்கப்படவுள்ளது.

இவ்வழித்தடத்தில் காலை மற்றும் மாலையில் பயணிகள் நெரிசல் மிகுந்த நேரங்களில் பொது மக்கள், பள்ளி மாணாக்கர்கள் மற்றும் கட்டணமில்லாமல் மகளிர் எளிதில் பயணம் செய்யும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைகிணங்க நகரப் பேருந்து மூலம் கூடுதலாக பேருந்து வசதி இயக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn