ஒருவேளை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படும் வார்டுகள் - மாநகராட்சி தகவல்

ஒருவேளை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படும் வார்டுகள் - மாநகராட்சி தகவல்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட ஆளவந்தான் படித்துறை நீரேற்று நிலையத்திலிருந்து வார்டு எண் : 1 முதல் 7 வரை பகுதிகளுக்கு காலை 5:00 மணி முதல் 8:30 மணி வரையிலும் மற்றும் மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரையிலும் இருவேளை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது . 

இந்நிலையில் தற்போது கொள்ளிடம் ஆற்றில் நீர்மட்டம் குறைந்துள்ளதால், நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீரானது மேற்கண்ட வார்டுகளுக்கு தொடர்ந்து இருவேளை வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை சீர்செய்யும் வரை வார்டு எண் : 1 முதல் 7 வரை பகுதிகளுக்கு குடிநீரானது காலை 5:00 மணி முதல் 8:00 மணி வரை ஒருவேளை மட்டும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது .

இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision