திருச்சியில் நாளை (08.10.2021) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சியில் நாளை (08.10.2021) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுமைய வளாகத்தில் நாளை (08.10.2021) வெள்ளிக்கிழமை அன்று  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கவுள்ளன. 

இவ்வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் தொழில்பயிற்சி (டர்னர், வெல்டர் & பிட்டர்) முடித்த (18 வயது முதல் 35 வயது வரை) அனைவரும் கலந்து கொள்ளலாம். நேர்காணலில் கலத்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல், சுயவிபரக்குறிப்பு (Resume), ஆதார் அட்டை நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  

தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் (08.10.2021) வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருகை புரிந்து பயன்பெறலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் தெரிவுத்துள்ளார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn