பள்ளிகளில் தீபாவளி விழிப்புணர்வு ஏற்படுத்திய ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ்

பள்ளிகளில் தீபாவளி விழிப்புணர்வு ஏற்படுத்திய ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ்

தீபாவளி பண்டிகையொட்டி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.

இதில் விழா காலங்களில் பேருந்து மற்றும் ரயில்களில் பயணம் செய்யும்போது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதேபோன்று வெடி வெடிக்கும் பொழுது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் கூட்டநெரிசல்களில் பொருட்களை பாதுகாக்க வைப்பது குறித்தும் அறிவுறுத்தினர்.

மேலும் மாணவ மாணவியரின் சந்தேகங்களுக்கு ரயில்வே காவல்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision