விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் பேரணியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

திருச்சிராப்பள்ளியில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் (14.06.2025 அன்று திருமாவளவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மதசார்பின்மை காப்போம் பேரணியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
இந்தியாவை மதசார்பற்ற நாடாக பாதுகாப்போம்,வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்,குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் தேசிய மக்கள் தொகை பதிவேடு தேசிய குடிமக்கள் பேரோடு ஆகியன தயாரிப்பதை கைவிட வேண்டும், மதவாத வன்முறை தடுப்புச் சட்டத்தின் நிறைவேற்ற வேண்டும்,கும்பல் கொலைகளை
பயங்கரவாத குற்றமாக அறிவித்து விட வேண்டும், ஜம்மு-காஷ்மீரை மீண்டும் மாநிலமாக அறிவிக்க வேண்டும், மதம் மாறியவர்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமைகளை வழங்க வேண்டும்,சம வாய்ப்பு ஆணையத்தை அமைத்திட வேண்டும்,பீகார் மாநிலம் புத்தகயாவில் உள்ள மகாபோதி
விகாரையை பௌத்தரிடம் ஒப்படைக்க வேண்டும்,வழிபாட்டுத்தலங்கள் சிறப்பு வழிபாடு தளங்கள் சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தை விளக்கக் கூடாது,பொது சிவில் சட்டம் கொண்டு வர முயற்சி கைவிட வேண்டும் போன்ற 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் இறந்து போனவர்களுக்காகவும், மற்றும் அந்த விமானம் அருகில் உள்ள மருத்துவ மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதியில் விழுந்ததால் இறந்து போன மாணவர்களுக்காகவும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision