பொன்மலை ரயில்வே தொழிற்சங்க தலைவருக்கு பணி ஒய்வு பாராட்டு விழா

பொன்மலை ரயில்வே தொழிற்சங்க தலைவருக்கு பணி ஒய்வு பாராட்டு விழா

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் டீசல் ஷாப் பகுதியில் 40 ஆண்டு பணிபுரிந்தவர் R.மணிவண்ணன். இவர் எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தில் டீசல் மெக்கானிக்கல் கிளை தலைவராகவும், தென்னக இரயில்வே கூட்டுறவு நாணய சங்கத்தில் தொடந்து 18 ஆண்டு இயக்குநர் ஆக இருந்து வந்தவர். 

ரயில்வே தொழிலாளர்களுக்கு பல சமூக பணி புரிந்த R.மணிவண்ணன் ரயில்வே பணி ஒய்வு விழா மற்றும் வழியனுப்பும் நிகழ்வு பொன்மலை ஆர்மரிகெட் பகுதியில் நடைபெற்றது. ஆர்.மணிவண்ணனுக்கு தொழிலாளர்கள் பொன்னாடை பேர்த்தி, மலர்மாலைகள், சந்தன மாலைகள், நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பாராட்டி சென்றார்கள்.

இவ்விழாவிற்கு  தி.மு.க. திருச்சி மாவட்ட விவசாயம் மற்றும் தொழிலாளர் பிரிவு மாவட்ட செயலாளர் கோ.ரமேஷ், பொன்மலை பகுதி முன்னாள் தி.மு.க தொழிற்சங்க தலைவர் ராமதாஸ், எஸ்.ஆர்.எம்.யூ தலைமை கிளை செயலாளரும், தென்னக இரயில்வே கூட்டுறவு நாணய சங்கத்தின் இயக்குனர் ஆர்.விஜயகுமார், மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம், நெடுஞ்செழியன், பாலு, மதி, ஆறுமுகம், ஜீவா, நாகராஜ், திருஞானம், தியாகராஜன், ஆரோக்கியநாதன் மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC