ரவுடி ஏழு பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை - திருச்சியில் பரபரப்பு!

ரவுடி ஏழு பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை - திருச்சியில் பரபரப்பு!

திருச்சி தென்னூர் வாமடம் பகுதியைச் சேர்ந்த சப்பானி செல்வி தம்பதியரின் மகன் விஜய் (வயது 20) பெயிண்டர் ஆன இவர் மீது பல்வேறு வழிப்பறி கொள்ளை வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் விஜய்க்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் கட்டைப் பஞ்சாயத்து செய்ததில் விரோதம் எழுந்துள்ளது.

Advertisement

இந்த நிலையில் நேற்று இரு தரப்புக்கும் இடையே வழக்கம்போல் தகராறு எழுந்துள்ளது. அப்போது போலீஸ் அங்கு வரவே அவர்கள் அனைவரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். இந்த நிலையில் இன்று மதியம் 2.30 மணி அளவில் விஜய் வீட்டிற்கு வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் கத்தியால் விஜயை சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த தில்லைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.